கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே. பிரபாகர் வெயிலில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர். இளநீர். நன்னாரி சர்பத்.எலுமிச்சம் பழம் ஜூஸ். வழங்கினார்...!

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக காணப்படுகிறது. பொதுவாக கோடை உச்சத்தில் இருக்கும் ஏப்ரல், மே மாதங்களை போலவே தற்போது பல்வேறு பகுதிகளில் வெயில் சதமடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், 
அடுத்த சில நாட்களுக்கும் தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் போக்குவரத்தை சரி செய்வதற்காக போக்குவரத்துக் காவலர்கள் வாட்டி வதைக்கும் வெயிலில்  பணியாற்றி பொதுமக்கள் தங்களது வாகனத்தில் சரியான நேரத்திற்கு சிரமமின்றி  சென்று வர போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
காவலர்கள் வெயிலில் நின்றவாறு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக 

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மோர், நன்னாரி சர்பத்.எலுமிச்சம்பழம் ஜூஸ் உள்ளிட்டவைகளை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக கரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே. பிரபாகர்  காவலர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
கோடைகால வெயில் நிறைவடையும் வரை போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்படும் 
மேலும் பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கும் ஏற்பாடு செய்யப்படும்
என கரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே. பிரபாகர். தெரிவித்துள்ளார்.

🌳 கே தமிழகம் சேட் ✍️