மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி கே பவானிஸ்வரி IPS தலைமையில்2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு - கேரளா இரு மாநிலங்களின் காவல் உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி 
கே பவானிஸ்வரி IPS தலைமையில்
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு - கேரளா இரு மாநிலங்களின் காவல் உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில்  வருகின்ற 2024 நாடாளுமன்றதேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய உயர் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்

 கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி
கே.பவானிஸ்வரி, IPS. அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை சுமூகமான முறையில் நடத்திடுவது பற்றியும், 

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் பற்றியும், இரு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்தல்கள் நடமாட்டத்தை குறைப்பது பற்றியும், தேர்தலில் போது குழப்பம் ஏற்படுத்தி வன்முறையை தூண்டி தேர்தலை சீர் குலைக்கும் எண்ணத்தை உடையவர்களை கண்காணிப்பது பற்றியும், மாநிலங்களுக்கிடையான நுண்ணறிவு தகவல்களை பகிர்வது பற்றியும், தேர்தலின் போது மாநில எல்லைகளில் நடைபெறும் குற்றங்களை தடுத்திட சோதனை சாவடிகள் மற்றும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைப்பது பற்றியும்,  வாக்காளர்களை அச்சுறுத்தும் இயக்கங்கள் பற்றியும், தேர்தலின் போது ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர், I.P.S.,

கேரளா மாநில திருச்சூர் சரக காவல்துறை துணைத் தலைவர் 
திருமதி.அஜுதா பேகம்,IPS 

 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன்,I.P.S.,

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா,I.P.S. அவர்கள், 

பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆனந்த்,I.P.S., 

மற்றும் திருச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நவநீத ஷர்மா,I.P.S., 

கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி கலால் ஆணையர் ஆகியோர் மேற்படி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



கோவை
63-வது தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப்  போட்டியில் கலந்து பரிசுகளை வென்ற காவலர்களை 
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்., I.P.S.,மாவட்ட பாராட்டினார்.

கோவை மேற்கு மண்டல காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள்   பிப்ரவரி 13 முதல்16 வரைநடைபெற்ற   63-வது தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி (63-rd TAMILNADU STATE POLICE INTER-ZONAL ATHELTIC CLUSTER-2023) போட்டியில் பங்கேற்றனர். மேற்படி தடகள போட்டியில் பங்கேற்ற 42 காவலர்கள் தங்கப்பதக்கம்-6, வெள்ளி-16 மற்றும் வெண்கலம்-20 பரிசுகளை வென்றுள்ளார். மேற்படி பரிசுகளை வென்ற காவலர்களை  பாராட்டும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்., I.P.S.,மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து  பாராட்டினார். 

கீழக்கரை பாக்கர் தலைமை நிருபர்


🌳 கே தமிழகம் சேட் ✍️