சிறப்பாக பணியாற்றிய காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்...!
கோவை காவல் சரக குற்ற விவாதிப்பு கூட்டம் இன்று (20.06.2023)
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர்
திரு.சுதாகர்., IPS. அவர்கள் மற்றும்
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்
திரு.விஜயகுமார். I.P.S.அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விவாதிப்பு கூட்டத்தில்
கோவை, காவல் கண்காணிப்பாளர்
பத்ரி நாராயணன் அவர்கள்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
ஜவஹர். அவர்கள்
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மரு. சாமிநாதன் அவர்கள்
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் அவர்கள்
ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் கோவை சரகத்திற்கு உட்பட்ட 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 30 உதவி/துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர். அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்..!
🌳கே தமிழகம் சேட் ✍️