முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர். மாண்புமிகு
ஆர் என் ரவி அவர்களுடன் முதல்வர் மு. க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட மாண்புமிகுஅமைச்சர்கள்.
சென்னை, தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான
திமுக அரசு கடந்த 2021 மே7-ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது.
ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.
பிறகு, அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் அளிக்கப்பட்டன.
அதே நேரம், கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இதுதவிர, வீட்டுவசதி துறையில் இருந்து சிஎம்டிஏ பிரிக்கப்பட்டு, அறநிலைய துறைஅமைச்சர் சேகர்பாபு விடம் தரப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்,
முதல்-அமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு - நிதி, மனிதவள மேம்பாடு
டி.ஆர்.பி.ராஜா - தொழில்துறை சாமிநாதன் - தமிழ் வளர்ச்சி - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம் ● மனோ தங்கராஜ் - பால்வளத்துறை மற்றும் சில இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ..!!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (11.05.2023) தலைமைச் செயலகத்தில், துறைகள் மாற்றியமைக்கப்பட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பூங்கொத்துகளை கொடுத்து நன்றியை தெரிவித்தனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️