வனத்துறை அமைச்சர் பொன்முடி வன பாதுகாப்பு வீரர் விருது வனசரக அலுவலர்களுக்கு புகழேந்தி. சரவணன் உள்ளிட்டவர்களுக்கு வழங்கினார்
தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் யானையின் வாழ்விடம் மற்றும் யானை பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை கிண்டி தேசிய பூங்காவில் நடைபெற்று வரும் யானை திருவிழா எனும் கருத்தரங்கினை வனத்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்து சிறப்பாக வனபணியாற்றிய வளசரக அலுவலர்கள். வானவர்கள் மற்றும் வன பணியாளர்களுக்கு வன பாதுகாப்பு வீரர் விருதை வழங்கி பாராட்டினார்.அதில் கலந்துக் காெண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, யானைத் திருவிழா நிகழ்ச்சியை துவக்கி துவக்கி வைத்து வைத்துள்ளோம்.
இந்தியா முழுவதும் உள்ள யானை சமூக ஆர்வலர்கள் இன்றும் நாளையும் நடத்துகின்றனர். யானைகளை வனத்தில் எப்படி பாதுகாப்பது, அவைகளுக்கு ஆபத்து வராமல் தடுப்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர். யானைகள் மட்டும் அல்லாமல்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.காட்டுப் பகுதியில் உள்ள விலங்குகள் வெளியில் வராமலும், மனிதர்கள் உள்ளே செல்லாமல் இருப்பதற்கும் மின்வேலிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வன விலங்குகளால் விவசாயிகளுக்கும், கிராமப் பகுதி மக்களுக்கும் எந்த ஆபத்தும் வராமல் பார்க்க வேண்டும் என்பது தான் பணியாக உள்ளது என்றார் இந்த நிகழ்ச்சியில் வனத்துறை செயலாளர் செந்தில்குமார்.IAS. வனத்துறை தலைவர் சீனிவாசா ஆர் ரெட்டி IFS.
முதன்மை தலைமை வன பாதுகாப்பு ராகேஷ் குமார் டோக்ரா. IFS.
மற்றும் நிகழ்ச்சியில்
ஆனைமலை புலிகள் காப்பகம் (கோவை) கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் வெங்கடேஷ் IFS.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர்
கிருபாசங்கர்.IFS
சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர்.
யோகேஷ் குலால் IFS
ஆசனூர் வனக்கோட்டம் துணை இயக்குனர் சுதாகர் IFS
கூடலூர் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு.IFS உள்ளிட்ட உயர் வனஅதிகாரிகள். அலுவலர்கள் வன உயிரின ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்
🌳 *கே தமிழகம் சேட்* ✍️