நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19.11.2024) முகாம் அலுவலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை நிருவாக அறங்காவலர்
. சையது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் . சையது முகமது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி,
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் . எஸ்.எம். நாசர்,
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், I.A.S.,
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் .
சா. விஜயராஜ் குமார், I.A.S.
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) திரு. ஸ்ரீனிவாஸ் ரா. ரெட்டி, I.F.S.,
மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் . நாகூர் ஏ.எச். நஜிமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️